Saturday, June 19, 2010

திரும்புதல்

அடிக்கடி குழந்தை கேட்பாள்
இந்த மீன் தொட்டி மீன்களை
கடலில் விட்டுவிடலாமா என்று

கடல் மீன்களின் தாய்வீடு
மீன்களின் நீர் விளையாட்டுத் திடல்
என்று அவளுக்கு
கதை சொல்லும் போது
குறிப்பிட்டது
அப்படியே தங்கிவிட
ஒரு நாள் கேட்டாள்

மீன் தொட்டியில
நகர்ந்து போவுது
கடல்ல விட்டா
ஓடும் இல்ல

அவள் விருப்பப்படியே
முடிவு செய்து
கவனமாய் கொண்டுபோய்
மீன் தொட்டியை
கரையில் வைத்து
எல்லா மீன்களையும்
வழி அனுப்பி வைத்தோம்

ரொம்ப தூரம் போயி
விளையாடுங்க எனச்சொல்லி
குதித்தபடியே கடலுக்கு
கையசைத்தாள் குழந்தை

அலை பதிலுக்கு
தலை அசைத்தது

மீன் தொட்டியில்
நிரம்பி இருந்தது
கடலின் நன்றி

3 comments:

  1. வாழ்த்துகள் அருமையான கவிதைக்கு .

    ReplyDelete
  2. //மீன் தொட்டியில்
    நிரம்பி இருந்தது
    கடலின் நன்றி//

    Nice lines Raajaa.

    ReplyDelete