Thursday, May 06, 2010

இப்போது

வரைந்த சிலுவையின் மேல்
வந்தமர்ந்தது பறவை

உடல் குவித்தபோது
சில துளிகள்
சிறகுகளைப் போல
பறந்து விழுந்தன

எப்படி உன்னால்
அமர முடிந்தது

கேள்வியை அலகால்
கொத்திக் கொண்டு
பறந்து போனது

இப்போது சிலுவைமேல்
பறவை ஓவியமாய்

பறவையின் கீழ
சிலுவை உண்மையாய்

6 comments:

  1. அருமையா இருக்கு இதைப் படிக்க.

    ரேகா ராகவன்
    (சிகாகோவிலிருந்து)

    ReplyDelete
  2. மிக அருமை சந்திரா!

    ReplyDelete
  3. நன்றி ரேகா ராகவன்,பா.ராஜாராம்.

    ReplyDelete
  4. நன்றி இரசிகை,பட்டர்பிளை சூர்யா.

    ReplyDelete