Thursday, April 29, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

75-

ஜென் குகை
இருளுமற்று வெளிச்சமுமற்று
குகையுமற்று

76-

என் சொற்களால்
பேசிவிட்டுத்
திரும்புகிறீர்கள்
என்னையும் விட்டுவிட்டு

77-

புத்தரை வரைந்தேன்
வரைய வந்தது
புத்தரா தெரியவில்லை

1 comment:

  1. கிறுக்கி வைத்த
    வார்த்தைகளால்
    வரைந்து வைத்த
    எல்லா முகத்திற்கும்
    புத்தன் என்றே பெயர் வைத்தேன்
    குடையை மழை
    நனைத்து கொண்டிருந்தது

    ReplyDelete