Thursday, April 22, 2010

இன்னொரு புத்தகம்

பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்

------

முதியவர் வீடு
காற்றில் ஆடுகிறது
தேதி கிழிக்காத காலண்டர்

------

தொலைந்து போனதுண்டா
நீங்கள் உங்களில்
தொலைந்து போனதுண்டா

-------

அடை மழை
மூடிய கோயில்
கடவுளும் நானும்
மழைத்துளிகளை எண்ணியபடி

-------

விற்காத பொம்மை மீது
எடுத்துப் பார்த்தவர்களின்
விரல் ரேகைகள்

11 comments:

  1. /விற்காத பொம்மை மீது
    எடுத்துப் பார்த்தவர்களின்
    விரல் ரேகைகள் /
    இது அசத்தல்!

    ReplyDelete
  2. காட்சிகளாக நீளும் வார்த்தைகள்! அந்த காட்சிகளின் ஊடாக மிதந்து வரும் உணர்வலைகள்!

    ReplyDelete
  3. sharp eyes to notice everyone around. :) loved each of them.

    ReplyDelete
  4. நன்றி அன்புடன் அருணா,சாய்ராம்,விதூஷ்.

    ReplyDelete
  5. aththanaiyum azhagu...!

    //
    பக்கங்கள்
    மாற்றிப் படித்த கதையில்
    இன்னொரு புத்தகம்
    //

    !

    ReplyDelete
  6. கவிதைகள் அருமை.. :-))

    ReplyDelete
  7. காற்றில் படபடக்கும் தாள்கள் சொல்கின்றன தனிமையின் வலியை.

    ReplyDelete
  8. இந்த ஞாயிறு பொக்கிஷமாய் ஆகப்போகிறது.உங்கள் கவிதைகள் எல்லாம் படித்து

    அது சரி மழையின் கடவுள் ஏதும் கூறவில்லையா

    ReplyDelete
  9. பக்கங்கள்
    மாற்றிப் படித்த கதையில்
    இன்னொரு புத்தகம் - fantastic...

    ReplyDelete