Monday, April 12, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

70-

எறிந்த கல்
உள்ளிறங்குகிறது
சொல்லென

71-

கொன்ற எறும்பு
விரட்டுகிறது
மிருகமென

72-

வெறும் தாள்
இல்லை
ஜென் தோட்டம்

73-

வெளியேறக் காணோம்
உள்ளிருக்கும் மிருகம்
பழகியாக வேண்டும்

74-

நான் இறந்து கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
இறந்து போகும்வரை

5 comments:

  1. //வெறும் தாள்
    இல்லை
    ஜென் தோட்டம்//

    //நான் இறந்து கொண்டிருப்பதைப்
    பார்த்துக் கொண்டிருந்தேன்
    இறந்து போகும்வரை//

    அருமை :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. //எறிந்த கல்
    உள்ளிறங்குகிறது
    சொல்லென//

    //வெளியேறக் காணோம்
    உள்ளிருக்கும் மிருகம்
    பழகியாக வேண்டும்//

    கவிதைகளை செதுக்கியிருக்கிறீர்கள்...! அசத்தல்.....

    ReplyDelete
  3. //
    வெறும் தாள்
    இல்லை
    ஜென் தோட்டம்
    //

    ithai purinjukkath theriyalainga..yenakku!

    michchathellam nallaayirukku!!

    ReplyDelete
  4. வெளியேறக் காணோம்
    உள்ளிருக்கும் மிருகம்
    பழகியாக வேண்டும்


    பழகியாக வேண்டுமா?
    பழக்க வேண்டுமா?

    ReplyDelete