Sunday, April 04, 2010

காரில் ஆடும் பொம்மை

நெருங்கிவிட்ட வீடு
குடிகாரனின் கால்கள்
குழப்பத்தில்
--
கவனமாக காலடி வைக்கிறேன்
குழந்தைகளின்
மழை கப்பல்கள்
--
பட்டாம்பூச்சி பிடிக்கிறது குழந்தை
இல்லை இல்லை
பட்டாம்பூச்சி பிடிக்கிறது பட்டாம்பூச்சி
--
கனவில்
தூங்குவதை தடுக்க
எழுகிறான் போராளி
--
நள்ளிரவு
காரில் ஆடும் பொம்மை
ஓட்டுனருடன் பேசிக்கொண்டு
--
பழைய நண்பர்கள்
காலங்களைக் கோர்க்கிறார்கள்
பார்க் பெஞ்சில்
--

6 comments:

  1. //பட்டாம்பூச்சி பிடிக்கிறது குழந்தை
    இல்லை இல்லை
    பட்டாம்பூச்சி பிடிக்கிறது பட்டாம்பூச்சி//

    மலர்கள் நிறைந்த தோட்டத்தில், ஓடியாடும் மலராக ஒரு சிறுமி பட்டாம்பூச்சியை துரத்துவது கண்ணில் வந்து போகிறது ராஜா.
    I love this poem my friend.

    ReplyDelete
  2. //பழைய நண்பர்கள்
    காலங்களைக் கோர்க்கிறார்கள்
    பார்க் பெஞ்சில்//
    எளிமையாகவும் அருமையாகவும் கோர்த்திருக்கிறீர்கள்.... அத்தனை கவிதைகளும் அருமை!!!

    ReplyDelete
  3. நன்றி கல்யாணி,கவிதன்.

    ReplyDelete
  4. yellaame azhaku...nga:)

    pommai...veru nice!

    ReplyDelete
  5. நள்ளிரவு
    காரில் ஆடும் பொம்மை
    ஓட்டுனருடன் பேசிக்கொண்டு

    அமானுஷ்யமாய்

    ReplyDelete