Friday, March 05, 2010

ஜன்னல் விழியில்

அப்பா வானவில் பல
நிறத்துல இருக்கு
மழை மட்டும் ஏன் ஒரே
நிறத்துல பெய்யுது
பல கலர்ல பெய்யாதா

கேள்வியின் நிறங்கள்
அப்பாவினுள் இறங்க
பதில் தேடியபடியே
குழந்தையை சமாளிக்கிறார்

ஜன்னல் விழியில்
ரசிக்கிறது மழை
இருவரையும்

5 comments:

  1. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //ஜன்னல் விழியில்
    ரசிக்கிறது மழை
    இருவரையும் //

    Superb Raajaa. :)

    ReplyDelete
  3. //பல கலர்ல பெய்யாதா//
     
    இந்த வரி தேவையில்லை எனக் கருதுகிறேன். கவிதை அருமை.

    ReplyDelete
  4. உழவன்
    ஒரு குழந்தையின் இயல்பை அந்த வரி சித்தரிப்பதால் தேவையாகிறது.

    ReplyDelete