Thursday, February 25, 2010

புத்தர்கள்

களவாடிக் கொண்டு வந்த புத்தர்
கை நழுவி விழுந்து
உடைந்து போனார்
புத்தர்களாக

பல திருடன்களாகிப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
எந்த புத்தரை
எடுப்பதென

11 comments:

  1. அளவில் சிறுமை...
    ஆனாலும்
    அர்த்தத்தில் அருமை நண்பரே...

    ReplyDelete
  2. அற்புத அனுபவமூட்டும் கவிதை...

    ReplyDelete
  3. அருமையா இருக்கு சார்.

    நன்றி.

    ReplyDelete
  4. நண்பர்களின் வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. என்னவெல்லாமோ சொல்ல நினைத்து கடைசியில் "அருமை சார்" என்றே எழுதுகிறேன். :)

    வித்யா

    ReplyDelete