Saturday, February 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

47-

எனக்குத் தரப்பட்ட
இடத்தில் இருந்தன
நானே எடுத்துக்கொள்ள
ஏராளமான இடங்கள்

48-

அவனை எல்லோரும்
பைத்தியம் என்றார்கள்

அவன் எல்லோரையும்
பைத்தியம் என்றான்

விவாதம் முடிவுக்கு வந்தது

49-

கூண்டுடன்
பறந்துபோனது கிளி
கனவில்
கூண்டை பத்திரமாக்க
கிளியைப் பறக்கவிட்டான்

2 comments:

  1. //அவன் எல்லோரையும்
    பைத்தியம் என்றான்//

    உண்மைதாங்க.

    ReplyDelete