Monday, February 15, 2010

கனவைத் தந்து சென்றவன்

நான் திரும்ப வந்து
கேட்கும் வரை
பத்திரமாக வைத்திரு
எனச் சொல்லி
அவன் ஒரு கனவைத்
தந்து சென்றான்

அதை வைத்திருப்பது
பெரும்பாடாக இருந்தது

நீண்ட நாட்களுக்குப் பிறகு
திரும்பியவன்
கனவைக் கேட்டான்

பின் சொன்னான்

இது என் கனவில்லை
நீ மாற்றி இருக்கிறாய்
நான் தந்ததுபோல
தா என்றான்

உன் கண்ணீரும் புலம்பலும்
இதில் சேர்ந்திருக்கிறது

உன் கனவுகளை
இடையிடையே புகுத்தி
சிதைத்திருக்கிறாய்

சொல்லிக்கொண்டே போனான்

நீ சொன்னது போல்
எதுவும் நடக்கவில்லை
என்றாலும் கேட்கவில்லை

இரவல் கனவை ஏன்
வாங்கினோம்
என்றிருந்தது எனக்கு

இப்போதும்
கனவில் வரும் அவன்
குற்றம் சொல்வதை
நிறுத்தவில்லை

என்னாலும் இந்த
கனவிலிருந்து
மீள முடியவில்லை

8 comments:

  1. மீள முடியாத கனவு!

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அடுத்தவர் கனவை நாம் காண இயலாது. அடுத்தவர் வாழ்வை நாம் வாழ முடியாது. நம் கனவு நம் வாழ்வு.

    ReplyDelete
  3. I love the abstract content of this poem..

    ReplyDelete
  4. ரசித்தேன் கொடுத்த விதத்தால்

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  6. நண்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete