Monday, January 18, 2010

நீதான்

நீதான்

இந்தக் கொலையைச்
செய்தது நீதான்

பொய் சொல்லாதே
மறைக்காதே
பதுங்காதே
ஓடி விடாதே

உன் கத்தி
ரத்தம் கக்கி
எல்லாவற்றையும்
சொல்லி விட்டது

கத்தியில்
ஒட்டிக் கிடக்கும்
வெட்டுப்பட்டவனின் நாக்கு
உரக்கச் சொல்கிறது
உன் பெயரை

நீதான்

இந்தக் கொலையைச்
செய்தது நீதான்

நீயேதான்

2 comments:

  1. மனிதர்கள், யாருக்கும் தெரியாதென்று நினைத்து செய்கின்ற காரியத்திற்கும் கூட ஏதோ ஒரு மௌன சாட்சியேனும் இருக்கக் கூடும்.

    ReplyDelete