Friday, December 25, 2009

விருந்தினர்

திட்டப்போகும்
அம்மாவை சமாளிக்க
பல பதில்களை
யோசித்து
பலமான ஒன்றைத்
தேர்ந்தெடுத்து
வீட்டிற்குள்
அடியெடுத்து
வைக்கிறாள் சிறுமி

இப்படி
நெனைஞ்சி வந்து
நிக்கிறியே
பதறுகிறாள் அம்மா

அது இல்லம்மா
மழைய விருந்தினரா
கூப்பிட்டுக்கிட்டு
வந்திருக்கேன்
சொல்கிறாள் மகள்

மகளின் பதிலில்
பரவசமாகித்
திட்டுவதை
மறக்கிறாள் அம்மா

2 comments:

  1. உங்களின் கவிதைகளை படிக்கும் போதெல்லாம் இருக்கையின் நுனிக்கு வந்து விடுகிறது மனது...அத்தனை உணர்சிகளோடு தொடர்கிறது கவிதைகள்....வாழ்த்துக்கள்..

    ReplyDelete