Saturday, December 12, 2009

குழந்தைகளின் பெயர்கள்

தன் பிறந்த
நாளுக்கு
எல்லோருக்கும்
சாக்லெட்
கொடுத்த கொண்டே
வந்த குழந்தை
என்னிடம் வந்தபோது
தீர்ந்து போயிருந்தது

ஏமாற்றத்துடன்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டோம்

பரவாயில்லை
உன் பெயரைச் சொல்
போதும் என்றேன்

சொல்லிய
குழந்தையின் பெயரில்
இனிப்பு மழை

குழந்தையின் டப்பாவில்
நிரம்பி இருந்தது
சாக்லெட் எடுத்திருந்த
குழந்தைகளின் பெயர்கள்

5 comments:

  1. /சொல்லிய
    குழந்தையின் பெயரிலிருந்து
    பெய்தது
    இனிப்பு மழை//

    அசத்தல் வரிகள்..நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு ராஜா. என் வால் பையனோட பிறந்த நாள் நினைவுக்கு வருது.

    ReplyDelete
  3. மிகவும் அழகாக இருக்கிறது...

    ReplyDelete
  4. chattunu pidichchathunga.............

    ReplyDelete