Saturday, November 21, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

20

இன்னும் கொஞ்சம்
இருள் கொடுங்கள்
என்னிடம்
ஒளி இருக்கிறது

இன்னும் கொஞ்சம்
வலி கொடுங்கள்
என்னிடம்
கண்ணீர் இருக்கிறது

21

கையிலிருக்கும்
முட்டை
முட்டைக்குள்ளிருக்கும்
குஞ்சு
குஞ்சுக்குள்ளிருக்கும்
உலகம்
உலகத்திற்குள்ளிருக்கும்
நான்

22

நேற்றை
தன் கோப்பையில்
நிரப்பி
குடிப்பவனுக்கு
என்றும்
தீராது தாகம்

2 comments:

  1. //இன்னும் கொஞ்சம்
    இருள் கொடுங்கள்
    என்னிடம்
    ஒளி இருக்கிறது//

    தன்னம்பிக்கை வரிகள்.

    //நேற்றை
    தன் கோப்பையில்
    நிரப்பி
    குடிப்பவனுக்கு
    என்றும்
    தீராது தாகம் //

    உண்மைதான்.

    ReplyDelete