Saturday, November 21, 2009

கரையோரம்

கரையோரம்
நடந்து போகும்
தந்தையும் மகனும்

அப்பா சொல்வதை
அலைகளைப் போல வாங்கி
கடலாகிக் கொண்டிருக்கிறான்
மகன்

(ஆனந்த விகடன்,30.12.09
இதழில் வெளியானது)

3 comments:

  1. அழகு சந்துரு
    அப்பா
    நம்முடைய முதல் கதாநாயகன் அல்லவா
    இந்த கவிதை
    சிறு வயது என்னையும்
    சிறு வயது அப்பாவையும்
    நினைவுக்கு கொண்டு வந்தது

    ReplyDelete