Saturday, November 21, 2009

ராகத்தின் பெயர்

ரயிலில்
புல்லாங்குழல் வாசித்த
பெரியவரிடம்
அது என்ன ராகம் என்றேன்

தெரியாது என்றார்

பெயரைக் கேட்டேன்
சொன்னார்

துணையாக வந்தது
அவர் இசை

இறங்கியபோது
அவரிடம் சொன்னேன்
அந்த ராகத்தின் பெயர்
தெரியுமென்று

வியப்புடன் பார்த்தார்

அவருக்குத் தெரியாது
அவர் பெயரை
அந்த ராகத்திற்கு
நான் வைத்திருப்பது

2 comments:

  1. சான்ஸ் ஏ இல்லப்பா
    வாட் எ நைஸ் கவிதை
    பீலிங்க்ஸ் ஆகிட்டேன்பபா

    ReplyDelete