Saturday, November 14, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

15

ஏற்று
காற்றுத் திரியை
காற்றில்
அணையாமல் எரிய

16

சூன்யம் தின்னும் குரங்கு
கிளை தாவும்
தாவும்
தாவும்
தா
வும்
மரணம் தாவும்

17

இறந்துபோனவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியவர்கள்
எழவில்லை

18

என் அரசவையில்
மக்களென்று
யாருமில்லை
எல்லோரும்
ராஜாக்கள்தான்

19

எல்லா முடிந்த
கவிதையிலும்
ஒரு முடியாத
கவிதை

2 comments:

  1. கொஞ்சம் force ஆ இருக்கிற மாதிரி தோணுது. இருந்தாலும் கூட எனக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete