Saturday, November 07, 2009

துறவி அவன் மற்றும் பூ

நீங்கள் வரைந்த
பூவிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது

சொல்லியவனைப் பார்த்து
சிரித்தபடியே
துறவி கேட்கிறார்

எப்படி சொல்கிறாய்
உன் கையில்
பூ இருக்கிறது
என் கையில்
தூரிகை இருக்கிறது
நமக்கிடையே
வெள்ளைத்தாள்
படபடக்கிறது

கண் மூடி
அவர் கேள்வியை
முகர்ந்த அவன்
அதில் சுகந்தம் வீசுகிறது
எனச்சொல்லி
பூவை
துறவியிடம் தர
அவர் வாங்கி
வெள்ளைத் தாளில்
நடுகிறார்

வளர்ந்து விரியும்
பூவை பார்த்து
வியக்கும் அவன்
எட்டிப் பிடிக்க
நினைக்கும் வாசம்
இடம் மாறிக்கொண்டே
இருக்கிறது

3 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு ராஜா.

    ReplyDelete
  2. அருமையாய் இருக்கு சந்திரா..

    ReplyDelete
  3. அருமை..
    perception differs from person to person and it depends on the attitude and the circumstance
    என்று சொல்ல வருவதாக படுகிறது.
    //வளர்ந்து விரியும்
    பூவை பார்த்து
    வியக்கும் அவன்
    எட்டிப் பிடிக்க
    நினைக்கும் வாசம்
    இடம் மாறிக்கொண்டே
    இருக்கிறது//
    And these lines talk abt..
    when you try to capture or conquer a thing.. it will be out of reach. nu
    மனம் அடக்க நினைத்தால் அலையும்
    அறிய நினைத்தால் அடங்கும் ..
    அதுக்கு match ஆகிற மாதிரி தோன்றியது

    ReplyDelete