Friday, October 02, 2009

வார்த்தைகளின் தூரத்தில்

இன்னும் சில நொடிகளில்
இந்த பல்லி
அந்த பூச்சியைத்
தின்றுவிடக் கூடும்
என தட்டச்சு செய்யும் மனம்

வார்த்தைகளின் தூரத்தில்
அப்படியே இரண்டும்
பல்லி பசியற்று
பூச்சி மரண பயமற்று

4 comments:

  1. நல்லா இருந்தது...

    ReplyDelete
  2. இரண்டு உயிர்களும் உறைந்திருக்கும் கணம் கண் முன் விரிகிறது.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete