Friday, October 02, 2009

அரங்கில் அவன்

அரங்கில் நடித்து முடித்து
பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து
மீண்டும் பார்த்து
சரி செய்கிறான்
மறுபடி பழுதின்றி தயாராக

வெறும் மேடையை
ஏன் வேடிக்கைப் பார்க்கிறாய்
என்று அவனைப் போகச் சொல்கிறான்
கதவை மூடும் காவலாளி

3 comments:

  1. ரசித்தேன் தனிமை நாடகத்தை...

    ReplyDelete
  2. இப்படியான ஒரு வெறும் மேடை வேடிக்கை வாழ்க்கைக்கும் அவசியம்தானோ?

    ReplyDelete
  3. வலிமையான வரிகள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete