Monday, October 26, 2009

தேடி நடப்பவன்

கையில் கோடரியுடன்
தொண்டை வறள
தேடி நடப்பவன்
கனத்த மனத்துடன்
சொல்கிறான்
அய்யோ
எல்லா நிழலையும்
வெட்டிட்டனே
பாம்பாய் நீளும்
அவன் நிழலை
கொத்தி தின்கிறது
வெயில்

8 comments: