Sunday, October 25, 2009

மீட்சி

நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா
முள்வேலி போல் தைக்கிறது
குழந்தை கேட்பது

விடை தெரியாத தாய்
குழந்தையின்
கவனத்தை மாற்றி
கதை சொல்லி
தூங்க வைக்கப் பார்க்கிறாள்

தூங்கிய
குழந்தையின் உதடுகள்
முணுமுணுக்கிறது
நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா

2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு சந்திரா.

    ReplyDelete
  2. வலி தரும் வரிகள் ராஜா.

    ReplyDelete