Saturday, September 12, 2009

முனுசாமி தாத்தா

காலில் சக்கரம் மாட்டியது போல்
சுற்றி வருவார் முனுசாமி தாத்தா

எது கேட்டாலும்
அதுக்கெல்லாம் நமக்கு எங்கப்பா
நேரம் இருக்கு என்று
சொல்லிவிட்டு பறப்பார்
இளமை சாரல் அடிக்க

பாட்டி ஒரு நாள் கோபத்தில்
கத்தினாள்

சிரித்தபடியே தாத்தா
சொல்லிவிட்டுப் போனார்

அட சாவறதுக்கெல்லாம்
நமக்கு எங்க நேரம் இருக்கு

7 comments: