Sunday, September 06, 2009

வனம்

உள்ளங்கையில்
மரம் முளைத்தது

தலையில் பறவைகள்
கூடு கட்டின

வியர்வையில் மிதந்தன
உதிர்ந்த இலைகள்

மரங்கொத்தி கையில்
ஓட்டைகள் போட்டு
புல்லாங்குழலாக்கி இசைத்தது

மூச்சுக்குள் ஓடி
வெளி வந்து விளையாடின
பனித்துளிகள்

மயிர்கால்கள் புற்களாயின

கால்களின் ஈரத்தில் மன்புழுக்கள்
நெளிந்தன

புன்னகையைத் தடவிப்பார்த்த
குருவி நன்றி சொல்லி
சுற்றி வந்தது

காட்டின் மொழியை
பேசத் தொடங்கியது நாக்கு

விரிந்த சத்தத்தை
நனைத்தது மழை

மெல்ல நடமாடும்
வனமாகியது உயிர்

வனத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது
உடல்

4 comments:

  1. //மெல்ல நடமாடும்
    வனமாகியது உயிர்

    வனத்திலிருந்து
    வெளியேறிக் கொண்டிருந்தது
    உடல் //

    எனக்கு பிடித்த வரிகள்

    ReplyDelete
  2. arumayana kavidhai raja sir. loved watching your metaphorical world through your word play. the last two lines are the killers. beautiful!

    ReplyDelete
  3. thanks ashok ,seral and vijay.
    vijay i hope you read the poem,
    vanagalin narumanam.

    ReplyDelete