Saturday, September 12, 2009

சாவி

திரும்பி வருகையில்
சாவியைத் தொலைத்தவர்கள்
தேடிக் கொண்டிருந்தார்கள்

தன் சின்ன நோட்டில்
சாவியை வரைந்த சிறுமி
அதை எடுத்து
பூட்டைத் திறந்து
உள்ளே செல்லும்போது
சொல்லிவிட்டுப் போனாள்

உங்கள் சாவி கிடைத்தவுடன்
திறந்து கொண்டு
வாருங்கள்

4 comments:

  1. எப்போதுமே குழந்தைகளின் உலகம் அதிசயம் நிறைந்ததுதான்.

    ReplyDelete
  2. அருமையான கவிதை!

    //தன் சின்ன நோட்டில்
    சாவியை வரைந்த சிறுமி
    அதை எடுத்து
    பூட்டைத் திறந்து
    உள்ளே செல்லும்போது
    சொல்லிவிட்டுப் போனாள்//

    இந்த வரிகளில் “அதை எடுத்து” இல்லாமலும் கவிதை சிறப்புற அமைகிறது.

    ReplyDelete