Thursday, September 17, 2009

காற்றின் பெருவெளி

காற்றின் பெருவெளியில்
அப்பாவின் இசை

அவர் விரல்கள் ஒற்றி எடுக்க
பரவுகிறது நாதம்
புல்லாங்குழலிலிருந்து

அருகே வரும் குழந்தை
நாய்க்குட்டி பொம்மையை
வைத்துவிட்டுப் பார்க்கிறது

வாசிப்பின் இடையே அப்பா
மெல்ல கண் திறக்கும்போது
புல்லாங்குழலைக் கேட்கிறது

வாங்கிப் போய் அதை
ஒரு பொம்மையாக்கி விளையாடுகிறது

புல்லாங்குழலைத் தூக்கி எறிகிறது

பின் ஓடிப்போய் எடுக்கிறது

பிரியமான நாய்க்குட்டியைத்
தட்டுகிறது

தன் வாயில் வைத்து
ஊதிப் பார்க்கிறது

ததும்பும் ஆனந்தத்துடன்
இரு வேறு அனுபவங்களில்
திளைக்கிறார் அப்பா

குழந்தையின் கையில்
இசை விளையாடுவது போன்றும்

தனக்குத் தெரியாத இசையை
குழந்தை கற்பிப்பது போன்றும்

5 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு. சில சமயம் குழந்தைகளே நமக்கு ஆசான்களாகவும் மாறிவிடுகிறார்கள் இல்லையா?

    ReplyDelete
  2. இரு இசையின் ஊடே வேறொன்றை இசைக்கிறது கவிதை

    ReplyDelete