Tuesday, September 15, 2009

ஒரு புராதன சொல்

ஒரு புராதன சொல்
கவிதையில் புகுந்து கொண்டு
மொத்த கட்டுமானத்தையும்
கலைத்துப் போட்டது

ஒரு அகராதியின் குணம்
தன்னிடம் இருப்பதாக
சொல்லியபடி
எழுதிய காகிதங்களைத்
தின்று முடித்தது

பின் ஓடிப் போனது
புராதன வெளிக்குள்

சொல் சென்ற
வழி எங்கும்
இறைந்து கிடந்ததன
காலத்தின் தூசிகளும்
கவிதையின் சில்லுகளும்

4 comments:

  1. நல்லா இருக்கு...
    புராதன சொல்லைக் கவிஞனின் திமிராகவும் நான் எடுத்துக் கொள்கிறேன்...

    ReplyDelete