Friday, September 11, 2009

குட்டிச் சித்திரங்கள்

என் ஒவ்வொரு கேள்விக்கும்
பதிலை படமாக
வரைந்து காட்டினாள் குழந்தை

அவள் பிஞ்சு விரல் பிடித்து
வெளியே வந்தன
குட்டிச் சித்திரங்கள்

வண்ணங்களில் நுரைத்து
மிதந்து போனது
குழந்தையின் மொழி

முற்றிலுமாக
என் கேள்விகள் வடிந்து விட
கடைசியாக
அவள் பெயர் கேட்டேன்

எல்லா வண்ணங்களையும் குழைத்து
என் மேல் பூசி விட்டு
வீட்டுக்குள் ஓடிப்போய்
கதவைச் சாற்றிக் கொணடாள்

இந்த வண்ணங்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
குழந்தையின் பெயரை

6 comments:

  1. குழந்தைகள் என்றாலே குதுகூலம்
    தருகிறவர்கள் தான்

    படிக்கும் போதே மகிழ்ச்சி வருதுங்க

    ReplyDelete
  2. வண்ணங்களின் தேவதை. :)

    ரொம்ப நல்லா இருக்கு raajaa.

    ReplyDelete