Friday, September 04, 2009

நள்ளிரவில்

நள்ளிரவில் விழித்துக் கொண்டோம்

முற்பகல் நடந்த
சண்டையை நினைத்துப் பார்த்தோம்

பின் உறங்கப் போனோம்

உன் தலையணை அடியில்
கத்தி இருந்தது

என் தலையணை அடியில்
கத்திக்கான ரத்தம் இருந்தது

6 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு சந்திரா..(இது நெருக்கமா இருக்கு.எனக்கு இப்படியே இருங்களேன்.)

    ReplyDelete
  2. மிக அருமை!

    சார்...அடுத்தத் தொகுப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. பாரா
    உங்கள் எழுத்தைப் போலவே
    உங்கள் அன்பும் இனிமை.கருத்துக்கு நன்றி.

    சேரல்
    தொகுப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.நன்றி.

    ReplyDelete