Saturday, July 04, 2009

கதை சொல்லி

பாட்டியை எல்லோருக்கும்
கதை சொல்லியாகத்தான் தெரியும்

வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்

ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை

ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்

படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு

திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்

பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்

கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்

ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்

ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்

பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை

ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்

எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்

6 comments:

  1. இந்தக் கதையை நான் ரசித்தேன்

    ReplyDelete
  2. 'புதிய' பாட்டிக் கதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பாட்டிக்கதை வெகு சிறப்பானது.

    ReplyDelete
  4. ஓர் அழகான கதையைக் கொண்டிருக்கிறது கவிதை. வாழ்த்துகள்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. நல்ல க(வி)தை...

    ReplyDelete