Friday, July 31, 2009

கால்பந்து ஆடிய தேவதை

நீருக்குள்
கால்பந்து ஆடிய தேவதை
விளையாட வரச் சொன்னாள்

நீச்சல் தெரியாது என்றேன்
வருத்தத்துடன்

ஆடத் தெரியுமா என்றாள்
இல்லை என்றேன்

ஒன்றைக் கற்றுக் கொள்
அது இன்னொன்றை
சொல்லித் தரும் என்றபடி
பந்தை உதைத்து
மறைந்து போனாள்

நதிக்கரை சிலையாய் அமர்ந்திருந்த
என்னை கலைத்தது
குளித்துக் கரையேறிய
சிறுமியின் சிரிப்பு

அவள் கண்களில்
தேவதையின் புன்னகை

4 comments:

  1. சிறுமிடம் தேவதையைப் பார்த்த உங்கள் கவிமனதுக்கு சல்யூட்!

    ReplyDelete
  2. நானும் தேவதைகளைக் காணும் பாக்கியம் பெற்றவன் :)

    நல்ல கவிதை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. பரிசல்காரன் said...
    சிறுமிடம் தேவதையைப் பார்த்த உங்கள் கவிமனதுக்கு சல்யூட்!

    இதுவே!

    ReplyDelete
  4. பல படிமங்களை உள்அடக்கிய கவிதை இது
    சிறுமி நம் எல்லோர் மனதிலும் இருக்க வேண்டிய ஒருத்தி
    இருக்க கூடியதும் கூட. தேவதையின் சொல் ஆழமானது.
    இப்படியாக சொல்லி கொண்டே போகலாம் .
    எப்பொழுதும் போல் 'அருமை'

    ReplyDelete