Tuesday, July 07, 2009

நட்பும் வரிகளும்

அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்

பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி

கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று

கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்

தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது

குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்

தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி

இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ

8 comments:

  1. வேல் உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கு
    நன்றி

    ReplyDelete
  2. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  3. செய்திவளையம் குழுவிற்கு
    மனம் நிறைந்த நன்றி

    ReplyDelete
  4. நிதர்சனமான கவிதை...

    ReplyDelete
  5. நல்ல கவிதை

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. i want to share a interesting mail abou this poem.

    superb!

    very subtle, very soft, but very contemporary - reflects that friendship in today's fast world is not like before.
    The only friend left or we can depend on is the balcony plant. It is not in a hurry, it enquires about you like always (as imagined by the poet).

    My question to the poet:
    The blossom of the single flower... what does it indicate?
    Does it mean a new friend is coming into the poet's life?

    This is the meaning I got from the classic last line.

    regards
    mouli

    ReplyDelete