Monday, April 20, 2009

யாருக்கும் தெரியாமல்

ஒப்பனை இல்லாமல்
நடித்து முடித்ததற்காக
கைதட்டல் பெற்றவர்
தனியே போய்
வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்த
சாயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்
யாருக்கும் தெரியாமல்

2 comments:

  1. அது சரிதான். சாயம் பூசாத வார்த்தைகள்தான் ஏது?

    ReplyDelete