Saturday, March 14, 2009

இரவல் சிறகுகள்

சிலையாகவும்
சிலை மீது
அமர்ந்திருக்கும்
பறவையாகவும் இருந்தேன்
ஒரு மாய கணத்தில்

இரவல் சிறகுகள் பெற்று
பறந்து போனது சிலை
பறவை சிலையாக

இப்போது நான்
தொலைவில் புள்ளியான
பறவையைப் பார்த்தபடி

பறக்க முடியாமல்
சிலைக்குள்
இருந்தபடி

2 comments: