Monday, January 26, 2009

பதினேழு முறை...

இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்

உன் வலி இறக்கிய வார்த்தைகளில்
இரண்டு முறை

நண்பனின் ஏளன மெளனத்தில்
ஓரிரு முறை

தன் துரோகத்திற்கு
என் பெயர் சூட்டி மகிழ்ந்த
உறவினரின் செயலுக்கு
ஒரு முறை

தம் செளகர்யங்களுக்குத் தக்கபடி
என்னை பிடுங்கி
பின் நட்டு வைக்கும்
கரங்களில் பலமுறை

இப்படி இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்
(சில விடுபட்டிருக்கலாம்)

வேண்டுமானால்
நீங்களும் என்னை
சாகடித்துக் கொள்ளலாம்

என் நிஜ மரணத்தில்
சேர்த்து வைப்பேன்
எல்லா இந்த
மிச்ச மரணங்களையும்

2 comments:

  1. 'பதினேழு முறை' யில் மரணம் என்ற வார்த்தையில் வலியின் வலி உணர்ந்தேன். மற்ற கவிதைகளும் அருமை. 'ஏதாவது ஒரு நான்' எனக்கு பிடித்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. please read my poem " maranam baavitha en udal" which came in uyirosai of uyirmai.com which will be of this same wave lenth..... waiting for your comments on that... ur thoughts in many poems r impresing me a lot.... 'vaarungal ilaipaaralaam ' i enjoyd it..

    endrum anbudan,


    inba...
    inbasubramanian.blogspot.com

    ReplyDelete