Thursday, October 23, 2008

என்றோ விதைத்த சொல்

புல் ஒற்றி எடுக்க
விரல் வந்த பனித்துளி
மாற்றிக்கொண்டிருந்தது
என்னை ஒரு
தாவரமாய்
--------------------
என்றோ விதைத்த சொல்
பெருக்கெடுத்தோடும்
அன்பாய் இன்று
--------------------
விடுபட்ட
ஒரு கண்ணீர் துளி
குதிக்கிறது
புன்னகையில்
----------------

3 comments:

  1. விடுபட்ட
    ஒரு கண்ணீர் துளி
    குதிக்கிறது
    புன்னகையில்

    உண்மைதான் எல்லாத்துயரங்களும் ஒரு புன்னகையில் ஆரம்பித்து மறு புன்னகையில் முடிகின்றன.

    ReplyDelete
  2. மூன்றும் முத்தாய்ப்பாய் உள்ளது,
    அதிலும்,
    //என்றோ விதைத்த சொல்
    பெருக்கெடுத்தோடும்
    அன்பாய் இன்று//

    மிக மிக அருமை, சொல்லின் வலிமை உலகறியும்,
    அதிலும் அன்பான, ஆதரவான சொற்கள் அண்டமாலும்.
    நட்பின் சொற்கள் - நரகத்தை கூட மீட்டெடுக்கும்,

    நன்றி - வாழ்த்துக்கள் - தொடரட்டும் உங்கள் தேடல்.

    மகிழ்வுடன்,
    இரவி.

    ReplyDelete
  3. புல் ஒற்றி எடுக்க
    விரல் வந்த பனித்துளி
    மாற்றிக்கொண்டிருந்தது
    என்னை ஒரு
    தாவரமாய்


    arumai.........

    ReplyDelete