Saturday, March 01, 2008

வழி அறியாக் குளிர்

முட்டும் காற்றில்
அசையும்
மழைக்கயிறுகள்

கண்ணாடியில் மொய்க்கும்
துளிகள்கூட்டம்

வழி அறியாக் குளிர்

கைகள் அணைத்த
தேநீர் கோப்பை

இறங்கும் சூடு

துன்பம் தராத தனிமை

பழகிய காத்திருப்பு

கூப்பிட்டாய்
கைபேசியில்
உன் பெயர்
ஒரு புதிரைப்போல

அழகான பொய்களோடு
சில உண்மைகளும்

வராதது குறித்து
வருத்தம் தெரிவித்தாய்
இந்த முறையும்

என் மௌனம் உன்னை
ஒன்றும் செய்யவில்லை

பிறகு பேசுவதாகத்
துண்டித்தாய்

உன் குரல் மறைய
கேட்கத் தொடங்கினேன்
மழையின் பேச்சை

4 comments:

  1. another picturesque poem ...
    in your regular style ...

    முட்டும் காற்றில்
    அசையும்
    மழைக்கயிறுகள்
    - அழகான வரிகள்.

    ReplyDelete
  2. முதல் வரியே அழகு.
    கவிதைக்காட்சியும் சிறப்பு.

    ReplyDelete
  3. Azhagana poigaloodu sila unmaigalum
    Azhagana varigal

    Un kural maray ketkathodanginen mazhain pechai

    Avanin arpudhamana rasanai thodarattum innum sirappana kavithaigalodu

    ReplyDelete