Saturday, September 08, 2007

துக்கம் தராத பாடல்

தூக்கமற்ற இரவில்
வயலினைப் பார்க்கிறன்
இசைக்கலைஞன்

நதி எனப்பாய்ந்த
இசை ஊற்றுகள்
மறுபடி நனைக்கின்றன

இமைகளை
சேர்க்க விடாத இரவு
சத்தமிடுகிறது

தனக்குள் விழித்திருக்கும்
முகம் தெரியாத ஒன்றை
வாசிக்க விரும்புகிறான்

குழந்தையாகிறது
கைகளில் வயலின்

அடிவானத்தில்
வண்ணங்கள் பூசும்
விடியலைப் பார்த்தபடி
இசைக்கிறான்
யாருக்கும் துக்கம் தராத
ஒரு பாடலை

1 comment: