Tuesday, January 09, 2007

மனம் தயாரித்த கதை

மனம் தயாரித்த
கதைக்குள் போனேன்
வரவேற்றப் பெரியவர்
பூச்செண்டு கொடுத்தார்
ஏதோ ஒரு பக்கத்தில்
சின்னப்புன்னகை
குழந்தைகள் தம்
கால்பந்து விளையாட்டைப்
பார்க்க வைத்தனர்
கதைக்குள் நிறைய
சந்திப்புகள்
மரணம் பற்றிச் சொன்னது
உடைந்த பனித்துளி
கை நீட்டிய இடமெல்லாம்
பழங்களும் பூக்களும்
ஒரு அத்தியாயத்தில் அருவி
முழுதும் நனைத்தது
கையில் சிக்கிய மீன்கள்
விரலை விட்டு வெளியேறின
கதையின் சில வார்த்தைகள்
மீன்களின் கண்களில்
முடியாத கதையில்
எங்கிருக்கிறேன் என்று
தெரியவில்லை
உள்ளே வந்த குரல்
இழுத்துப்போட்டது
மீன் கொழம்ப கொஞ்சம்
பையனுக்கும் வைங்க

2 comments:

  1. hai raj, its me kalai.

    really nice one ma.

    enna kuda kunja neeram unga manasu kulla kootitu pooirichi indha "KADHAI"

    ReplyDelete
  2. கதைக்குள்ளான பயணம் நல்லா இருக்கு.

    ReplyDelete