Saturday, August 12, 2006

சிவப்பு ரிப்பன்

நேந்துக்கிட்ட சாமிக்கிட்ட
நேரா புள்ளைய கொண்டு போயி
முடி எறக்கணும்

கடவுள் காரியம்
கடன வாங்கிப் போயி பண்ண
அப்பனுக்கு மனசு ஒப்பல

புள்ளைக்கு முடி சேர்ந்து
நீளமாச்சி

சிக்கு தலை
பாரம் தாங்காம
சத்தம் போடுறான்

கூலி வேல அப்பங்காரன்
ஆகாசத்த பாத்து கும்பிட்றான்
வேலையும் காசும்
வேகமா வரணும்னு

சீக்கிரம் முடி எறக்கு
அபபதான் நம்ம கஷ்டமெல்லாம்
இறங்கிப்போவும்

சிவப்பு ரிப்பனால
புள்ள முடிய கட்டி
பொலம்பித் தீக்கறா பொண்டாட்டி

2 comments:

  1. varumaiyin niram sivappu...........:(

    ReplyDelete
  2. அடித்தட்டு மக்களுக்கு இறை தரிசனம் கூட ஆடம்பரம்தானோ?

    ReplyDelete